December 1st, 2006 at 4:51pm |
[தலைப்புக்காக நாடோடிக்கு நன்றி. பதிவும் இன்னுமொரு மீள் பதிவு தான். சிறுவர் பூங்காவில் இருந்ததை இங்கே பொன்ஸ் பக்கங்களில்..]
எங்கள் வீட்டுப் பூனை
எங்கள் வீட்டுப் பூனைஎங்கும் ஓடும் பூனைமுறுக்குத் தின்னும் பூனைமூலையில் அமரும் பூனை
எலியைக் கண்டு விரைவாய்எதிர்ப்பக்கம் ஓடும் பூனை;சலிக்காமல் தான் வெளியேசாலை சுற்றும் பூனை
பல்லி பிடித்து வாலைமட்டும் வெட்டும் பூனைமல்லிப்பூ போல் வெண்மைமாறாத பூனை
தங்கையோடு சேர்ந்துதானும் தூங்கும் பூனை.சங்கு கழுத்தைத் தூக்கிதாய்மடி கேட்கும் பூனை
நாயைக் கண்டு நடுங்கிநன்றாய் ஓடும் பூனைவாயை மெல்லத் திறந்துகொட்டாவி விடும் பூனை
காலை சரியாய் […]
Read the rest of பூனை.. பூனை.. பூனைக் குட்டி…
November 23rd, 2006 at 12:44pm |
நீர் நீர் - பிரசுரமான என் முதல் கவுஜ
நீர் நீர் எங்கும் இல்லை குடிநீர்
அதனால்உலகம் முழுவதும் கண்ணீர்
ஏனோ வானம் பொழியவில்லை விண்ணீர்ஆகவேகிடைக்கவில்லை தண்ணீர்
மண்ணில் நீர் கிடைக்கும் என்றேஎண்ணி நான் தோண்டினேன்நீர்கிடைக்க இறைவனைத்தினமும் வேண்டினேன்
தோண்டியது பலிக்கவில்லை;வேண்டியதில் பலனில்லை;
மண் தரவில்லை மறுவற்ற நீர்விண் தரவில்லை விலையற்ற நீர்ஏன் தரவில்லை நீர் என்றே எண்ணிநான் அவ்விரண்டைப் பார்த்தேன்
மண் சொன்னது மரமில்லைஎனவேவிண் சொன்னது மேகமில்லை
நான் புரிந்து கொண்டேன் நன்றாகநீங்கள்..?
[இந்த மாதிரி கவுஜயெல்லாம் எப்படிப் பிரசுரமாச்சுன்னு சந்தேகமா? உங்க அப்பா இல்லைன்னா அம்மா […]
Read the rest of கோகுலம் - இதழ் 3
September 8th, 2006 at 10:57am |
தோள் மேலமர்ந்துசாமி பார்த்த நாட்கள்..
என் தலை நோகாதுஉன் கை நோகக்குளிக்க வைத்த நாட்கள்..
ஒற்றைக் கையால்குளத்தில் எறிந்துநீந்த வைத்த நாட்கள்..
மகளெனமலர்ந்ததில்இழந்ததுஎத்தனை?!
மீண்டும்மழலை திரும்பவேண்டும்,உன் போர்வையில் புகுந்துஉள்ளங்கைகளில்உறங்கும்ஒரு நாளுக்காகவேனும்
நன்றி தமிழோவியம்
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read the rest of உள்ளங்கையில் உறங்கும் நாள்