August 29th, 2007 at 5:40pm |
ஞாயிறு மாலை பதிவர் சந்திப்பு என்றவுடன் ‘ஓ! வச்சிக்கலாமே!’ என்று பெரிதாக தலையாட்டியது நான் தான். ஆனால், அன்றைய மிக முக்கியமான சில அப்பாயிண்டமெண்ட்கள், அந்த நாள் முழுவதையுமே அடித்துக் கொண்டு போகக் கூடியவை என்பது அப்போது தெரியவில்லை…
பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் என்று கிட்டத்தட்ட பத்து வருடம் ஒன்றாக பழகிய ஒரு தோழனின் திருமணம், அதே போல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஏன், ஒரு சமயம் அறைத்தோழியாகவும் இருந்த நெருங்கிய தோழியின் அண்ணன் திருமணம் என்று […]
Read the rest of ‘இப்புடி ஏமாத்திப்புட்டீங்களே ஐயா!’ (ஆகஸ்ட் 26 சந்திப்பு)
April 23rd, 2007 at 4:49pm |
சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், “தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?” என்றார்.
“இந்த வெயிலிலா?” என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.
சாகரன் தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.
அடுத்து, சிறில் […]
Read the rest of சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்
December 19th, 2006 at 9:15am |
[பனகல் பூங்காவைப் பற்றிய சுறுசுறுப்பைக் குறைக்கும் தகவல்களுடன் செ.ப.ச 2 நாளை.] ஒரு வழியாக பனகல் பூங்கா வேண்டாம் என்று முடிவெடுத்து நடேசன் பார்க்கில் நான்கரை மணி சுமாருக்குக் கூடியது பதிவர் சந்திப்பு. திரு, பாலபாரதி, லக்கிலுக் என்று மூன்று செல்பேசிகளும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க, கிட்டத்தட்ட பனகல் சென்றிருக்கக் கூடிய அனைவரையும் நடேசன் பார்க்கிற்கு அழைத்துவிட்டோம்.
வந்திருந்தவர்கள் மற்றும் அவர்கள் சிறு அறிமுகமாக முன்வைத்த விஷயங்களுடன்:
அருள்குமார்: கதை கட்டுரை போன்ற விஷயங்களை “உணர்வின் பதிவுகள்” என்றும் […]
Read the rest of சென்னை பதிவர் சந்திப்பு - 3