March 31st, 2007 at 6:03pm |
கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:
யோசிப்பவர்
முத்துலட்சுமி
முத்துகுமரன்
திரு
முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று
1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் […]
Read the rest of ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்…
March 29th, 2007 at 5:21pm |
“என்ன ரேங்க்டா?” என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே.
“ரெண்டாவதுப்பா” ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு.
“ம்ம்ம்.” என்று பதில் சொன்ன அப்பாவின் குரலில் அதிகம் சுரத்தே இல்லை.
“ராமுவை விட ரெண்டு ரேங்க் முன்னால் எடுத்திருக்கேன்பா..” அவசர அவசரமாக பாலு சொல்லவும், அப்பா எந்தவித உணர்ச்சியுமில்லாமல் தலையாட்டினார்.
“சரி சரி, உள்ளே வந்து கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடுப்பா” என்று அம்மா அன்போடு அழைக்கவும் பாலு சோர்வு பொங்க உள்ளே போனான்.
“இன்னைக்கும் இட்லி தானா? அதுக்கு […]
Read the rest of தம்பிக்கு… (சிறுகதை)
March 27th, 2007 at 1:16pm |
‘பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்’, ‘பெண்புத்தி பின்புத்தி’ என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைப்பது ஆண்கள் சமைப்பதில்லை என்பது தான். “நச்சரிக்கும் வீட்டு வேலைகளைப் பெண்கள் தலையில் கட்டிவிட்டு, வீடு, சமையல் போன்ற தளைகள் அவர்கள் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி மற்ற உலக விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்? பழமொழிகள் எதிர்பார்க்கும் முன்யோசனைக்காரிகளாய் அவர்களால் எப்படிப் பிரகாசிக்க முடியும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
“ஆதிகாலம் […]
Read the rest of ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது